• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நாட்டில் வசிக்கும் சமூகங்களுக்கிடையில் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதத்திலான நிகழ்வுகள்
- அண்மையில் நாட்டில் சில இடங்களில் நிகழ்ந்த சமூகங்களுக்கிடையில் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதத்திலான நிகழ்வுகளும் சில குழுக்களின் குழப்பகரமான செயற்பாடுகளும் தொடர்பில் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதோடு, அத்தகைய நிகழ்வுகள் மற்றும் செயற்பாடுகள் எதிர்காலத்தில் ஏற்படாமல் இருப்பதற்குப் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கும் தேவை அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதற்கமைவாக, அமைச்சரவையினால் பின்வருமாறு தீர்மானிக்கப்பட்டது:

(i) நாட்டில் வசிக்கும் சமூகங்களுக்கிடையில் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதத்திலான நிகழ்வுகளுக்குப் பொறுப்புக் கூறவேண்டிய தரப்பினர்களுக்கு எதிராக நடைமுறையிலுள்ள சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் சட்டநடவடிக்கைகளை எடுப்பதற்கு சட்ட அமுலாக்கல் அதிகார பீடங்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கும்.

(ii) இத்தகைய நிகழ்வுகள் தமது அதிகார பிரதேசத்தினுள் ஏற்படாதவாறு நடவடிக்கைகளை எடுப்பதற்கு சகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குமாறு பொலிஸ் மா அதிபருக்குப் பணிப்பு விடுப்பதற்கும்.