• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்நாட்டுச் சந்தையில் அரிசி விலைகள் துரிதமாக அதிகரித்தல்
- உள்நாட்டுச் சந்தையில் அரிசி விலை துரிதமாக அதிகரித்துச் செல்வது சம்பந்தமாக அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதோடு, இது தொடர்பில் ஆழமாக கலந்துரையாடப்பட்டது. இதற்கமைவாக, உள்நாட்டு நெல் விவசாயிகளுக்கு பிரதிகூலமான பாதிப்புகள் ஏற்படாதவாறும் நுகர்வோருக்கு ஏற்கக்கூடிய விலையிலும் அரிசி கொள்வனவு செய்வதற்கு இயலுமாகும் வகையில் அரிசி இறக்குமதி செய்வதற்கு தனியார்துறையினருக்கு அனுமதியளிக்கும் பொருட்டு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறு இறக்குமதி செய்யப்பட வேண்டிய அரிசியின் அளவானது வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழுவினால் தீர்மானிக்கப்பட வேண்டுமெனவும்கூட அமைச்சரவையினால் மேலும் தீர்மானிக்கப்பட்டது.