• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பின்லாந்து அரசாங்கத்தினால் வழங்கப்படும் சலுகை நிதி வசதிகளைப் பெற்றுக் கொள்ளல்
- இலங்கையில் அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சிலவற்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு பின்லாந்து அரசாங்கம் 1983 ஆம் ஆண்டிலிருந்து 2006 ஆம் ஆண்டுவரை சலுகை நிதி வசதிகளை வழங்கியுள்ளது. தனது "அரசதுறை முதலீட்டு வசதிகள் நிகழ்ச்சித்திட்டம்" என்பதன் கீழ் இலங்கைக்கு சலுகை நிதி வசதிகளை மீண்டும் வழங்குவதற்கு பின்லாந்து அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக, இலங்கையில் அபிவிருத்திக் கருத்திட்டங்களுக்கு நிதியிடுவதற்காக பயன்படுத்தும் பொருட்டு 30 மில்லியன் யூரோக்கள் வரைலான கடன் தொகையொன்றைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு பின்லாந்து அரசாங்கத்துடன் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.