2017-05-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சருவதேச ஒத்துழைப்பிற்கான தலைவர்களின் வளைய மற்றும் வீதி அமைப்பின் வட்டமேசை கலந்துரையாடல் தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவித்தல் - மக்கள் சீனக் குடியரசின் சனாதிபதி அவர்களின் தலைமையில் 2017 மே மாதம் 15 ஆம் திகதி சீனாவில் நடாத்தப்பட்ட மேற்போந்த மாநாட்டின் தலைவர்களினது வட்டமேசை கலந்துரையாடல் சார்பில் மாண்புமிகு பிரதம அமைச்சர் அவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள் என்பதுவும் இந்த வட்டமேசை கலந்துரையாடலில் ரஷ்யா, ஸ்பெயின், சுவிற்சர்லாந்து, ஆர்ஜென்டினா, பெலருஷ்சியா, சிலி, இந்தோனேசியா, லாவோஸ், பிலிப்பின், துருக்கி, வியட்னாம், கம்போடியா, பிஜி, ஹங்கேரியா, இத்தாலி, மலேசியா, மியன்மார், பாகிஸ்தான் மற்றும் போலாந்து ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள் என்பதுவும் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அத்துடன், இந்த வட்டமேசை கலந்துரையாடலின் இறுதியில் வளைய மற்றும் வீதி தொடர்பிலான ஆரம்பம் அடங்கலாக பல்வேறுபட்ட அபிவிருத்தி திறமுறைகள், பொருளாதார அபிவிருத்தியை விரிவுபடுத்தல், பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துதல், விஞ்ஞான மற்றும் தொழினுட்ப புத்தாக்கங்கள், வலைய பொருளாதார ஒத்துழைப்பு போன்ற துறைகளில் சர்வதேச ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் நோக்கில் அரசாங்க தலைவர்களினால் வௌியிடப்பட்ட கூட்டு உத்தியோகபூர்வ அறிவித்தலில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களும்கூட அமைச்சரவையினால் மேலும் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. |