2017-05-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இரண்டாவது இந்து சமுத்திர மாநாடு - IOC 2017 - இலங்கையின் கொள்கைக் கல்வி நிறுவனம், பங்களாதேஷ் சர்வதேச மற்றும் திறமுறை கல்வி நிறுவனம் சிங்கப்பூர் சர்வதேச கல்வி தொடர்பிலான எஸ்.இராஜரத்தினம் கல்லூரி ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து "இந்து சமுத்திர மாநாடு - 2017” (IOC - 2017) ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதிலிருந்து செப்ரெம்பர் மாதம் 02 ஆம் திகதிவரை கொழும்பில் நடாத்துவதற்கு இந்திய ஆதார மன்றத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த மாநாட்டின் போது வலையத்தின் பாதுகாப்பு பொருளாதாரம், கலாசாரம் மற்றும் சுற்றாடல் போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதோடு, 30 க்கும் மேற்பட்ட நாடுகளின் உயர்மட்டத் தலைவர்களும் பிரமுகர்களும் இதற்காக கலந்து கொள்ளவுள்ளார்கள். இதற்கமைவாக இந்திய ஆதார மன்றத்தின் ஏற்பாட்டுடன் இந்த மாநாட்டை கொழும்பில் நடாத்தும் பொருட்டு மாண்புமிகு பிரதம அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|