2017-05-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
யட்டவத்தை பொலிஸ் நிலையத்தை நிருமாணிப்பதற்காக இலங்கை பொலிசுக்கு காணியொன்றை வழங்குதல் - யட்டவத்தை பொலிஸ் நிலையத்தை நிருமாணிப்பதற்காக உடுபுஸ்சல்லாவ பெருந்தோட்டக் கம்பனிக்குச் சொந்தமான யட்டவத்த பெருந்தோட்டத்திலிருந்து ஏக்கர் 02 றூட் 01 பேர்ச்சஸ் 35 விஸ்தீரணம் கொண்ட காணித்துண்டொன்றை இலங்கை பொலிசுக்கு வழங்கும் பொருட்டு சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |