2017-05-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பூநகரி பிரதேசத்தில் 240 மெகாவோட் கொண்ட காற்றுச்சக்தி மற்றும் 800 மெகாவோட் கொண்ட சூரிய சக்தி கலப்பு வலுசக்திப் பேட்டையை நிருமாணித்தல் - மின் உற்பத்திக்கு புதிப்பிக்கத்தக்க வலுசக்தி தோற்றுவாய்களுக்கு அணுகும் அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக கடந்த காலப்பகுதிக்குள் அத்தகைய வலுசக்தி கருத்திட்டங்கள் சில செயற்படுத்தப் பட்டுள்ளன. அதேபோன்று புதிப்பிக்கத்தக்க வலுசக்தி தோற்றுவாய்கள் மூலம் பெருமளவு மின்சாரத்தை தேசிய மின்சார முறைமைக்குள் மேலும் சேர்க்கப்படவுள்ளது. காற்று சக்தி மூலமும் அதேபோன்று சூரிய சக்தி மூலமும் மின்சாரம் உற்பத்தி செய்வதற்குப் பொருத்தமான பிரதேசமொன்றாக இலங்கையில் வடமாகாணத்திலுள்ள பூநகரிப் பிரதேசம் இலங்கை நிலைபேறுடைய வலுசக்தி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக, 240 மெகாவோட் கொண்ட காற்றுச்சக்தி மற்றும் 800 மெகாவோட் கொண்ட சூரிய சக்தி கலப்பு வலுசக்தி பேட்டையொன்றை பூநகரி பிரதேசத்தில் நிருமாணிக்கும் கருத்திட்டத்தை மூன்று (03) கட்டங்களாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |