2017-05-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நாரஹேன்பிட்டியவிலுள்ள பொலிஸ் வைத்தியசாலையின் விரிவாக்கம் மற்றும் புனரமைப்புக்காக மதியுரைஞர் முகவராண்மையொன்றை நியமித்தல் - நாரஹேன்பிட்டியவிலுள்ள பொலிஸ் வைத்தியசாலையின் விரிவாக்கம் மற்றும் புனரமைப்புக்காக நகர அபிவிருத்தி அதிகாரசபையிடமிருந்து 02 றூட் 23.05 பேர்ச்சர்ஸ் விஸ்தீரணம் கொண்ட காணியொன்றை பெற்றுக் கொள்வதற்கான அங்கீகாரம் அமைச்சரவையினால் வழங்கப்பட்டுள்ளது. ஆதலால், இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் நடைபெற்றுவரும் சில கருத்திட்டங்களுக்கான மதியுரைச் சேவைகளை தற்போது வழங்கும் மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்தின் சேவைகளை பெற்றுக் கொள்ளும் பொருட்டு சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|