2017-05-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய மீலாத் உன் நபி வைபவம் தொடர்பில் சகல அமைச்சுக்களினாலும் நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தல் - 2017 ஆம் ஆண்டு திசெம்பர் மாதம் 01 ஆம் திகதியன்று வருகின்ற, இறைதூதர் முஹமது நபி நாயகத்தின் பிறந்த தினத்தை நினைவுகூரும் பொருட்டு முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களமானது ஒழுங்குகளை செய்து வருகின்றது. அத்துடன் இந்த ஆண்டுக்கான நினைவுகூரல் வைபவமானது யாழ் மாவட்டத்தில் நடாத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ஒருங்கிசைவாக, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் முஸ்லிம் சமய செயற்பாடுகளின் அபிவிருத்திக்காக 14 மில்லியன் ரூபா கொண்ட தொகையொன்றை பொதுத் திறைசேரி ஏற்கனவே ஒதுக்கியுள்ளது. ஆதலால், இவ்வைபவத்தை நடாத்துவதற்காக சகல அமைச்சர்களினதும் அமைச்சுக்களினதும் ஒத்துழைப்பையும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் எதிர்பார்க்கப்படும் குறித்துரைக்கப்பட்ட அபிவிருத்தி செயற்பாடுகள் நோக்கியதாக அம்மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்களினதும் பிரதேச செயலாளர்களினதும் ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்ளும் பொருட்டு அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |