• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கடும் மழை காரணமாக கேகாலை மாவட்டத்தில் தேயிலை மற்றும் இறப்பர் பயிரிடப்பட்ட காணிகளுக்கு ஏற்பட்ட சேதங்களை ஈடுசெய்தல்
- 2016 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் 17 ஆம் திகதிகளாகிய இரு நாட்களில் பொழிந்த கடும் மழை காரணமாக கேகாலை மாவட்டத்தில் தேயிலை மற்றும் இறப்பர் பயிரிடப்பட்ட பெருமளவு காணிகளுக்கு சேதங்கள் ஏற்பட்டிருந்தன. ஆதலால், மீள் பயிரிடுகை செய்யப்படக்கூடிய ஒருநிலைக்கு அத்தகைய தேயிலை மற்றும் இறப்பர் பயிரிடப்பட்ட காணிகளை மீளமைக்கும் பொருட்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.