• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2017 ஆம் ஆண்டில் இலங்கையில் வறுமை ஒழிப்பு பற்றிய பல்துறைசார் தொழினுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு (BIMSTEC) அமைச்சர்கள் கூட்டத்திற்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு நிகழ்வை நடாத்துதல்
- பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம், தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் 1997 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்ட பல்துறைசார் தொழினுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு (BIMSTEC) அமைப்பானது பல்துறைசார் தொழினுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான அதன் தொழிற்பாடுகளை நடாத்துகின்றது. இந்த அமைப்பானது வறுமை ஒழிப்பு தொடர்பில் பிரதான வகிபாகத்தினை ஆற்றுவதுடன் இது சம்பந்தமாக இரு அமைச்சர்கள் கூட்டங்களை, அதாவது பங்களாதேஷ் நாட்டில் டாக்கா நகரத்தில் 2008 ஆம் ஆண்டில் ஒன்றையும் நேபாள நாட்டில் காத்மண்டு நகரத்தில் 2013 ஆம் ஆண்டில் இன்னொன்றையும் இது நடாத்தியுள்ளது. அதற்கிணங்க, இலங்கையில் பல்துறைசார் தொழினுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு (BIMSTEC) அமைப்பின் மூன்றாவது அமைச்சர்கள் கூட்டத்தினை நடாத்தும் பொருட்டு சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.