2017-05-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
எல்பிட்டியவின் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் மற்றும் பிரதேச செயலகம் ஆகியவற்றை நிருமாணிக்கும் பொருட்டு காணித் துண்டுகளை கையளித்தல் - பிரேரிக்கப்பட்ட எல்பிட்டிய நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தை நிருமாணிப்பதற்கென இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான எல்பிட்டிய டிப்போ காணியிலிருந்து 140 பேர்ச்சர்ஸ் விஸ்தீரணம் கொண்ட காணித் துண்டொன்றையும் எல்பிட்டிய பிரதேச செயலகத்தை நிருமாணிப்பதற்காக 01 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட காணியொன்றையும் கையளிக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |