• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாதுகாப்பு படைத்தலைமையகத்தினை (மத்திய) தாபிக்கும் பொருட்டு இருமாடி தலைமையகக் கட்டடமொன்றை நிருமாணித்தல்
- 2013 ஆம் ஆண்டில் தியத்தலாவையில் தாபிக்கப்பட்ட பாதுகாப்பு படைத்தலைமையகமானது (மத்திய) மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் தென் மாகாணத்தின் ஒரு பகுதிக்கும் பாதுகாப்பினை வழங்குகின்றது. அவசரமான பேரிடர் நிலைமைகளின் போதும் தேவையான நேரங்களில் பாதுகாப்பினை வழங்கும் போதும் முக்கியமான வகிபாகத்தினை இது ஆற்றுகின்றது. ஆதலால், தியத்தலாவையில் அமைந்துள்ள தொண்டர்படையின் பயிற்சிக் கல்லூரிக்குச் சொந்தமான கட்டடங்களில் பல்வேறுபட்ட வசதியீனங்களுக்கு இடையில் தற்போது நடாத்தப்பட்டு வருகின்ற மேற்போந்த தலைமையகத்தினை தாபிக்கும் பொருட்டு பாதுகாப்பு படைத்தலைமையக (மத்திய) மனையிடத்தில் இருமாடி கட்டடமொன்றை நிருமாணிக்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.