• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சர்வதேச நாணய நிதியத்தின் தெற்காசிய பிராந்தியப் பயிற்சி மற்றும் தொழினுட்ப உதவி மத்திய நிலையத்தின் உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்ளுதல்
- சர்வதேச நாணய நிதியத்தின் தெற்காசிய பிராந்தியப் பயிற்சி மற்றும் தொழினுட்ப உதவி மத்திய நிலையமானது 2016 ஆம் ஆண்டில் இந்தியாவின் புதுடில்லியில் தாபிக்கப்பட்டுள்ளது. பேரினப் பொருளாதார மற்றும் அரசிறை முகாமைத்துவம், அரசிறை நடவடிக்கைகள், நிதித்துறை பிரமாணங்கள் மற்றும் மேற்பார்வை மற்றும் பேரினப் பொருளாதார புள்ளிவிபரவியல் என்னும் பரந்துபட்ட வீச்சில் இலங்கை உள்ளடங்கலாக 6 அயல் நாடுகளிலுள்ள கொள்கை வகுப்பாளர்களுக்கும் அரசாங்க முகவராண்மைகளுக்கும் தொழினுட்ப உதவியினை இப்பயிற்சி மத்திய நிலையம் வழங்குகின்றது. ஆதலால், இம்மத்திய நிலையத்தினால் வழங்கப்படும் பயிற்சி வாய்ப்புகளை இலங்கை உத்தியோகத்தர்கள் சார்பில் பெற்றுக் கொள்வதற்கான உரிய உடன்படிக்கைகளில் கைச்சாத்திடும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.