• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கண்டி வடக்கு - பாததும்பர ஒன்றிணைந்த நீர்வழங்கல் கருத்திட்டம்
- பாததும்பர, புஜபிட்டிய, அக்குரணை, ஹரிஸ்பட்டுவ, கங்கவத்தகோரள மற்றும் தும்பான ஆகிய 6 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் பாதுகாப்பான குழாய் மூலமான நீர்வழங்கல் வசதிகளை வழங்குவதே கண்டி வடக்கு - பாததும்பர ஒன்றிணைந்த நீர்வழங்கல் கருத்திட்டத்தின் இலக்காகும். இக்கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக வர்த்தக ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்கான அங்கீகாரம் அமைச்சரவையினால் வழங்கப்பட்டுள்ளது. இக்கருத்திட்டத்தின் முழு செலவினையும் உள்ளடக்கி ஈடுசெய்யும் பொருட்டு சலுகைக் கடன் ஒன்றை வழங்குவதற்கு சீனாவின் EXIM வங்கி இணங்கியுள்ளது. அதற்கிணங்க, இக்கடனைப் பெற்றுக் கொள்வதற்கென கடன் உடன்படிக்கை யொன்றில் கைச்சாத்திடும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.