2017-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
களுத்துறை பொது வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் II ஆம் கட்டத்திற்கான நிருமாணிப்பு - களுத்துறை மாவட்டத்தில் முன்னணி வைத்தியசாலையான களுத்துறை பொது வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை நிருமாணிக்கும் வேலையானது 2015 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. தற்போதுவரை, இந்தக் கட்டடத்தின் I ஆம் கட்டத்தின் நிருமாணிப்பு வேலை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் மூன்றாம் மற்றும் நான்காம் மாடிகளின் நிருமாண வேலைகளை உள்ளடக்கிய II ஆம் கட்டமானது துரிதமாக ஆரம்பிக்கப்பட வேண்டியுள்ளது. அதற்கிணங்க, இந்தக் கருத்திட்டத்தின் II ஆம் கட்டத்திற்கான ஒப்பந்தத்தை வடிவமைத்தல் மற்றும் கட்டுதல் அடிப்படையில் மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கும் Central Engineering Services (Pvt.) Ltd. நிறுவனத்திற்கும் கையளிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |