2017-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சுகாதார மருத்துவ உத்தியோகத்தர் அலுவலகத்தை நிருமாணிப்பதற்காக இரத்தினபுரி புதிய நகரத்திலுள்ள காணித் துண்டொன்றை சப்பிரகமுவ மாகாண சபைக்கு குறித்தொதுக்குதல் - இரத்தினபுரி புதிய நகரத்தில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான கிட்டத்தட்ட 60 பேர்ச்சஸ் விஸ்தீரணம் கொண்ட காணித்துண்டொன்றை, அரசாங்க விலைமதிப்புக் கொடுப்பனவிற்கு உட்பட்டு, இரத்தினபுரி சுகாதார மருத்துவ உத்தியோகத்தர் அலுவலகத்தை நிருமாணிப்பதற்காக, சப்பிரகமுவ மாகாண சபைக்கு உரித்தளிக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |