2017-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இமதூவ நகர மத்தி்யிலுள்ள காணித் துண்டொன்றை இலங்கை மின்சார சபைக்கு வழங்குதல் - இமதூவ நகர மத்திய நிலையக் கருத்திட்டத்திற்காக நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் அரசாங்கத்திற்கும் தனியார்துறைக்கும் சொந்தமான சில காணித்துண்டுகள் சுவீகரிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் 01 றூட் 03.20 பேர்ச்சஸ் விஸ்தீரணம் கொண்ட காணித்துண்டொன்றை, அரசாங்க விலைமதிப்புக் கொடுப்பனவிற்கு உட்பட்டு, இமதூவ நகரத்திலுள்ள பிரேரிக்கப்பட்ட உப மின்நிலையத்தை தாபிப்பதற்கென, இலங்கை மின்சாரசபைக்கு உரித்தளிக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |