2017-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நெதர்லாந்து இராச்சிய கொடியுடன் பயணிக்கும் வணிக கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான இலங்கைக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை - நெதர்லாந்து இராச்சிய கொடியுடன் பயணிக்கும் சுமையேற்றிய வணிக கப்பல்கள் சார்பில் சோமாலிய கடற்கரைக்கு அப்பால் இந்து சமுத்திரத்தில் செயற்படுகின்ற நெதர்லாந்து அரசாங்கத்தின் கடற்படையின் உபகுழுவின் மூலம் இலங்கை கடற்படையின் சேவைகளை கட்டண அடிப்படையொன்றில் பயன்படுத்து வதற்கான கோரிக்கையொன்றை நெதர்லாந்து இராச்சியம் விடுத்துள்ளது. அதற்கிணங்க, கோரப்பட்ட சேவைகளை வழங்கும் பொருட்டு ஒவ்வொரு நாட்டையும் நிர்வகிக்கும் சருவதேச சட்டங்கள் மற்றும் ஏற்கனவேயுள்ள சட்டங்களுக்கிணங்க, இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சிற்கும் நெதர்லாந்து இராச்சியத்தின் பாதுகாப்பு அமைச்சிற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |