• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
களுத்தறை பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைக் கூடம் மற்றும் காவறைகளை நிருமாணித்தல் (கட்டம் II)
- களுத்தறை பொது வைத்தியசாலையில் தற்போது காணப்படும் இடவசதி போதுமானளவில் இல்லாதிருப்பதன் காரணமாக கண் சிகிச்சை சேவைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு சேவைகள் ஆகியவற்றின் ஏற்பாட்டில் விளைவிக்கப்படும் தடைகளை குறைக்கும் பொருட்டு கண் சத்திரசிகிச்சைக் கூடம் மற்றும் காவறைகளை நிருமாணித்தல் சார்பிலான கருத்தி்ட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆதலால், அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, மிகக் குறைந்த மதிப்பிடப்பட்ட போதுமானளவு ஏற்புடைத்தான விலைமனுதாரருக்கு ஒப்பந்தத்தினை கையளிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.