• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கடற்கரைக்கு அப்பால் உள்ள மணலை அகழ்ந்து, இறைத்து அதனை நிருமாணிப்புக் கைதொழிலுக்காக வழங்குதல்
- நிருமாணக் கைத்தொழிலுக்காக பயன்படுத்தப்படும் ஆற்று மணலின் பற்றாக்குறைக் காரணமாக மணலின் விலை வெகுவாக அதிகரித்துள்ளதுடன் மணலுக்கான மாற்றீடொன்றாக, சந்தைப்படுத்தலுக்காக கடற்கரைக்கு அப்பாலிருந்து கடல் மணலை சுத்திகரிப்பதற்கான கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு இலங்கை நிலமீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தினால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் இக்கூட்டுத்தாபனமானது மணல் அகழ்விற்கான உரிமப்பத்திரம் ஒன்றையும் கொண்டுள்ளது. இக்கருத்திட்டத்தின் கீழ் முத்துராஜவெலவிலிருந்து கடற்கரைக்கு அப்பால் உள்ள பிரதேசத்திலிருந்து கிட்டத்தட்ட 10 தொடக்கம் 16 கி.மீ வரையில் 4 கன மீற்றர் மணலை அகழ்ந்து இறைப்பதற்கு 2017 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கிணங்க கடல் மணலை அகழ்வதற்கென பொருத்தமான நிறுவனமொன்றை தெரிவு செய்வதற்கான பெறுகை நடைமுறையினை பின்பற்றும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.