2017-05-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அம்பாறை தொழினுட்பக் கல்லூரியை மேம்படுத்தும் கருத்திட்டத்தின் மீதி வேலைகளைப் பூர்த்தி செய்தல் - அம்பாறை தொழினுட்ப கல்லூரியானது தொழினுட்ப கல்வி, பயிற்சி திணைக்களத்தின் கீழ் தொழிற்பட்டு வருகின்றது என்பதுடன் தற்போது, இக்கல்லூரியானது மாணவர்களின் வருடாந்த உள்ளீர்ப்பானது அண்ணளவாக ஆயிரத்தைக் கொண்டுள்ள தேசிய வாழ்க்கைத் தொழில் தகைமைகள் மட்டங்கள் 3, 4, 5 மற்றும் 6 ஆகியவற்றிற்கான பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்துகின்றது. இக்கல்லூரியின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் நோக்குடன், விரிவுரை மண்டபங்கள் மற்றும் விடுதி என்பன பகுதியளவில் எந்நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பூர்த்தி செய்யப்பட்டிருந்தனவோ அந்த நிகழ்ச்சித் திட்டமான 2013 ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட 'தயட்ட கிருல்ல' அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஒருசில கட்டடங்கள் நிருமாணிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சர்கள் குழுவினால் செய்யப்பட்ட சிபாரிசுகளுக்கிணங்க, 2017 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டம் மூலம் ஒதுக்கப்பட்ட ஏற்பாட்டினைப் பயன்படுத்தி மீதிவேலையை பூர்த்தி செய்யும் பொருட்டு திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |