• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாரம்பரிய மருத்துவமுறை மற்றும் ஹோமியோபதி துறையில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளல்
- இந்தியாவானது நவீன தொழினுட்பவியல் தந்திரோபாயங்களுக்கூடாக ஆயுர்வேத மருத்துவமுறையிலும் அதேபோன்று ஹோமியோபதி முறையிலும் உயர் நியமமொன்றை அடைந்துள்ளது. இத்தகைய மருத்துவ முறைகளாவன அதேபோன்று இலங்கையிலும் பரந்துபட்டுக் காணப்படுகின்றன. அத்தகைய மாற்றீடான மருத்துவ முறைமைகளுக்கான வசதிகளை வழங்குவதன் மூலம், மலிவான, பாதுகாப்பான மற்றும் பக்கவிளைவற்ற சிகிச்சை முறைகளுக்காக மக்களை திசைதிருப்ப முடியும். அதற்கிணங்க, ஆயுர்வேத, ஹோமியோபதி மற்றும் ஏனைய மருத்துவ துறைகள் தொடர்பிலான அறிவு மற்றும் தொழினுட்பத்தை பகிரும் பொருட்டும் இலங்கை அரசாங்கத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையில் இருதரப்பு உறவினை மேம்படுத்தும் பொருட்டும் புரிந்துணர்வு உடன்படிக்கையினை கைச்சாத்திடுவதற்கென சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.