• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
போக்குவரத்து சேவைகளில் தர அபிவிருத்தியின் பொருட்டு பக்கமூன பேரூந்து நிலையத்தை புதிய இடமொன்றில் நிருமாணித்தல்
- பிரயாணிகளின் வசதிகருதி இத்தீவின் பிரதான நகரங்களிலும் புறநகரங்களிலும் பேரூந்துநிலைய அபிவிருத்தி பற்றிய அரசாங்க நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஒத்திசைவாக, ரஜரட்ட நவோதயா என அறியப்படும் பொலன்நறுவை மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பக்கமூன நகரத்தில் புதிய பேரூந்து நிலையமொன்றை கட்டுவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக காணித் துண்டொன்றை வழங்குவதற்கு பக்கமூன பிரதேசசபை உடன்பட்டுள்ளதுடன் ஒரே நேரத்தில் எழு (07) பேரூந்துகளை தரித்து நிறுத்தக்கூடிய வசதிகளுடன் பேரூந்து நிலையமொன்றைக் கட்டுவதற்குப் பிரேரிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, 50 மில்லியன் ரூபா தொகை கொண்ட மதிப்பிடப்பட்ட செலவில் பக்கமூன பஸ் பேரூந்து நிலையத்தை நிருமாணிக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.