• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைத்தல்
- வடக்கு குடாவிலுள்ள வியாபார செயற்பாடுகளின் மேம்பாட்டிற்கு காங்கேசன்துறை துறைமுகத்தின் புனரமைப்பானது அத்தியாவசியமானது என்பது கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. காங்கேசன்துறை துறைமுகமானது இந்தியாவின் சகல கிழக்குத் துறைமுகங்களுக்கும் அதேபோல் மியன்மார் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்குமான மிகக்கிட்டிய துறைமுகமாகும். இத்துறைமுகத்தின் புனரமைப்பிற்காக 45.27 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் தொகை கொண்ட கடனொன்றை வழங்குவதற்கான அதன் விருப்பத்தை இந்திய ஏற்றுமதி, இறக்குமதி வங்கி வௌிப்படுத்தியுள்ளதுடன் இக்கருத்திட்டத்தின் செயற்பாடுகளை இலங்கை துறைமுகங்கள் அதிகாரசபை கையாளும். அதற்கிணங்க உரிய கடன் நிபந்தனைகள் குறித்து இந்திய ஏற்றுமதி, இறக்குமதி வங்கியுடன் இணக்கப் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கும் இந்த வங்கியுடன் உடன்படிக்கைகளை கைச்சாத்திடுவதற்கும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.