• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தல்பிட்டிகல நீர்த்தேக்கக் கருத்திட்டம்
- பத்மெடில்ல திட்டத்திற்கு நீர்ப்பாசன நீரை வழங்கும் குறிக்கோளுடன் பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள பத்மெடில்ல அணைக்கட்டின் நீரோட்டத்திற்கு எதிர்திசையில் உமாஓயாவினை திசைதிருப்புவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. கந்தகெட்டிய பிரதேச செயலகத்திலுள்ள வசனகம, மதுல்ல, தட்டில்ல மற்றும் பெரமத ஆகிய பிரதேசங்களுக்கு பாதுகாப்பான குடிநீரினை வழங்குவதற்கும் தேசிய மின்சார வலையமைப்பிற்கு ஊட்டமளிக்கும் பொருட்டு வருடாந்தம் 51GWh கொண்ட நீர் மின்சாரத்தினை பிறப்பிப்பதற்கும்கூட பிரேரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டத்தினை 174 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் செலவில் நடைமுறைப்படுத்துவதற்கான அங்கீகாரம் அமைச்சரவையினால் வழங்கப்பட்டுள்ளது. மதிப்பிடப்பட்ட மொத்த செலவின் 85 சதவீதத்தினை வழங்குவதற்கு சீன ஏற்றுமதி, இறக்குமதி வங்கியினால் அதன் விருப்பம் வௌிப்படுத்தப்பட்டவாறு, கடன்வசதியினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு இலங்கை அரசாங்கத்திற்கும் சீன ஏற்றுமதி, இறக்குமதி வங்கிக்கும் இடையில் உடன்படிக்கையொன்றினை கைச்சாத்திடுவதற்கென தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.