2017-04-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பாணந்துறை மற்றும் பஹலயாகொட வாழ்க்கை தொழில்பயிற்சி நிலையங்களை நிருமாணித்தல் - உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு தொழிற்சந்தைக்கு ஏற்றவாறு வினைத்திறன்மிக்க தேர்ச்சி கல்வி முறையொன்றை உருவாக்குவதற்காக திறன் அபிவிருத்தி துறைசார்ந்த நிகழ்ச்சித்திட்டமொன்று அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும். இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பாணந்துறைப் பிரதேசத்தில் 370 மில்லியன் ரூபா செலவிலும் பஹலயாகொட பிரதேசத்தில் 170 மில்லியன் ரூபா செலவிலும் இரண்டு தொழில்பயிற்சி நிலையங்கள் நிருமாணிக்கப்படுவதோடு இதற்குத் தேவையான மதியுரைச் சேவையை மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திடமிருந்து பெற்றுக் கொள்ளும் பொருட்டு திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|