• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-04-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2013 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை திருத்துதல் - (தடுப்புக் காவலில் உள்ளவர்களின் உரிமைகள் - சட்டத்தரணியொருவரை அணுகுதல்)
- 2013 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரித்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவையினால் வழங்கப்பட்ட அங்கீகாரத்திற்கு அமைவாக இது 2017 மார்ச் மாதம் 03 ஆம் திகதி அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. சட்டத்தரணி ஒருவரின் உதவியை பெற்று கொள்வது சம்பந்தமாக தடுப்பு காவலில் உள்ள ஒருவரின் உரிமையினை உறுதிப்படுத்துவதற்காக பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கை முறையை மேலும் முறைப்படுத்தி திருத்துவது பொருத்தமானதென பிரேரிக்கப்பட்டுள்ளதோடு, உத்தேச திருத்தங்களை இந்த சட்டமூலம் சம்பந்தமான பாராளுமன்ற குழுநிலை சந்தர்ப்பத்தில் அது சேர்க்கப்படுமென பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.