2017-04-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கொழும்பு மாநகர சபையின் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்காக சுகாதாரமான குப்பை இடும் இடமொன்றை நிருமாணித்தல் - கொழும்பு நகரத்தில் சேரும் குப்பைகளை அப்புறப்படுத்துவதற்கு சுகாதாரமான குப்பை இடும் இடமொன்றை நிருமாணிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுக்களின் செயலாளர்களைக் கொண்ட குழுவொன்று அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளது. பேராதனை பல்கலைக் கழகத்தின் கழிவு முகாமைத்துவ ஆராய்ச்சி பிரிவினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த பிரேரிப்பை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு வத்தளை பிரதேச செயலக பிரிவின் உஸ்வெட்டகெய்யாவ, முத்துராஜவெல பிரதேசத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான 05 ஏக்கர் காணியில் நாளொன்றுக்கு சுமார் 400 மெட்ரிக் தொன் கழிவுகளை முகாமிக்கக் கூடிய சுகாதாரமான கழிவுகளை இடும் இடமொன்றை தாபிப்பதற்கு இந்த குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளதோடு, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு 2017 ஆம் ஆண்டு சார்பில் குறித்தொதுக்கப்பட்டுள்ள நிதி ஏற்பாடுகளைப் பயன்படுத்தி இந்த கருத்திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |