• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-04-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொருளாதார கருத்திட்டங்களின் ஒத்துழைப்பு சார்பில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் செய்துகொள்ளப்படும் புரிந்துணர்வு உடன்படிக்கை
- பொருளாதார கருத்திட்டங்களின் ஒத்துழைப்பு சார்பில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசாங்கத்திற்கும் இந்திய குடியரசு அரசாங்கத்திற்கும் இடையில் செய்துகொள்ளும் பொருட்டு பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இரு நாடுகளினாலும் கூட்டாக நடைமுறைப்படுத்த வேண்டிய திட்டவட்டமான கருத்திட்டங்கள் சம்பந்தமாக முறையான உடன்படிக்கைகளை செய்துகொள்வதற்கு முன்னர் உரிய தரப்பினர்களுடன் உசாவுதலைச் செய்து அமைச்சுக்கள் ஒவ்வொன்றினாலும் வெவ்வேறு அமைச்சரவை விஞ்ஞாபனங்கள் சமர்ப்பிக்கப்படும் என்பதுவும் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.