• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-04-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பிலியந்தளை கஹபொலவில் நிருமாணிக்கப்படவுள்ள பௌத்த நிலையம்
- 2017 - சருவதேச வெசாக் பண்டிகை தினத்திற்கு ஒருங்கிணைவாக புத்தசாசன அமைச்சும் Light of Asia தாபனமும் இணைந்து பாரதத்தின் "சாக்கிய ராஜ்ஜியத்தை" மீள் நிருமாணிக்கும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்காக 500 மில்லியன் ரூபாவானது Light of Asia தாபனத்தினால் ஏற்கப்படவுள்ளதோடு, கருத்திட்டத்தின் முதலாம் கட்டத்திற்கான பணிகள் சருவதேச வெசாக் பண்டிகை தினத்திற்கு ஒருங்கிணைவாக பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்து வதற்கான ஒப்பந்த உடன்படிக்கையில் Light of Asia தாபனமும் புத்தசாசன அமைச்சும் கைச்சாத்திடும் பொருட்டு புத்தசாசன அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.