• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-04-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2017 ஆம் ஆண்டில் அரசாங்க கடன் பெறல் நிகழ்ச்சித்திட்டத்தை செயற்படுத்துதல் - இலங்கை அபிவிருத்தி முறிகளை விநியோகிக்கும் வரையறையை அதிகரித்தல்
- 2016 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க ஒதுக்கீட்டு சட்டத்திற்கு அமைவாக 2017 ஆம் ஆண்டு சார்பில் மொத்த அரசாங்க கடன்படலின் உச்ச எல்லை 1,579 பில்லியன் ரூபாவாகும். இதில் 1,129 பில்லியன் ரூபா உள்நாட்டு ரீதியாகவும் மீதி 450 பில்லியன் ரூபா வௌிநாட்டு ரீதியாகவும் பெற்றுக் கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. வௌிநாட்டு கடன்படலின் கீழ் 1,500 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட சருவதேச பொண் முறிகளின் மூலம் பெற்றுக் கொள்வதற்கு ஏற்கனவே அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று உள்நாட்டு கடன் பெறலின் கீழ் 1,500 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வரை இலங்கை அபிவிருத்தி முறிகளை வௌியிடுவதற்கு 2017 சனவரி 10 ஆம் திகதியன்று அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. உள்நாட்டு சந்தையில் நிலவும் குறைந்த திரவ நிலமை மற்றும் அதிகரித்து செல்லும் திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறிகள் ஆகியவற்றின் வடடி விகிதாசாரம் என்பவற்றை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இந்த ஆண்டில் காலவதியாகவுள்ள இலங்கை அபிவிருத்தி முறிகள் அடங்கலாக இலங்கை அபிவிருத்தி முறிகளை விநியோகிக்கும் வரையறையை 1,500 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களிலிருந்து 3,000 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்கும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.