2017-04-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அறநெறி பாடசாலை ஆசிரியைகளுக்கு உத்தியோகபூர்வ ஆடை வழங்கும் பொருட்டு தேவையான துணிகளை (சேலை) கொள்வனவு செய்தல் - 2017 - தன்னார்வ அடிப்படையில் சேவை புரியும் அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு அரசாங்கத்தினால் இலவசமாக சீருடைகளை வழங்குதலானது 2004 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கமைவாக 2017 ஆம் ஆணடில் அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்குத் தேவையான 72,000 ரவிக்கைகளுடனான கைத்தறி சேலைகளை தேசிய புடவைக் கைத்தொழில் திணைக்களத்திடமிருந்து நேரடியாக கொள்வனவு செய்யும் பொருட்டு புத்தசாசன அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |