• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-04-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உத்தேச விசேட கைத்தொழில் வலயத்தையும் துறைமுகத்தையும் உள்ளடக்கி அம்பாந்தோட்டையில் ஒருங்கிணைக்கப்பட்ட நீர்வழங்கல் மற்றும் கழிவுநீர் கருத்திட்டம் பற்றிய சாத்தியத்தகவாய்வொன்றைச் செய்தல்
- அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கைத்தொழில் வலயமொன்றைத் தாபிப்பதற்காக அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டு வருகின்றதோடு, எதிர்வரும் 05 தொடக்கம் 20 வருட காலப்பகுதிக்குள் அம்பாந்தோட்டை பிரதேசத்தில் நீருக்கான தேவை துரிதமாக அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு அதிகரிக்கும் நீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு பிரதேசத்தில் தற்போதுள்ள நீர்வழங்கல் உட்கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லாமையினால், நீர் மற்றும் துப்பரவேற்பாட்டு வசதிகளை ஏற்பாடு செய்யும் பொருட்டு பொருத்தமான திட்டமொன்றை வகுத்தமைப்பதற்காக சாத்தியத் தகவாய்வொன்று துரிதமாக செய்யப்பட வேண்டியுள்ளது. இந்த சாத்தியத்தகவாய்வை மேற்கொள்வதற்காக M/s China Heavy Machinery Corporation நிறுவனத்தின் தொழினுட்ப மற்றும் நிதி உதவியினைப் பெற்றுக் கொள்வதற்கும் இந்த சாத்தியத்தகவாய்வின் முடிவின் அடிப்படையில் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பொருத்தமான ஒப்பந்தக்காரர் ஒருவரை "சுவிஸ் சவால் முறையின்" கீழ் தெரிவு செய்வதற்குமாக நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.