• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-04-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொகரெல்ல பொலிஸ் நிலையத்தை நிருமாணிக்கும் கருத்திட்ட கால எல்லையை நீடித்தல்
- 95.71 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டு செலவின் கீழ் கொகரெல்ல பொலிஸ் நிலையத்தை நிருமாணிக்கும் பொருட்டு 2015 திசெம்பர் மாதம் 23 ஆம் திகதியன்று அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. 2016 திசெம்பர் 31 ஆம் திகதியன்றுக்கு இந்த பொலிஸ் நிலையத்தின் நிருமாணிப்பு வேலைகளில் சுமார் 30 சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக இந்தக் கருத்திட்டத்தை பூர்த்தி செய்வதற்கான மீதி நிதி ஏற்பாட்டினை விடுவித்துக் கொள்வதற்கும் கருத்திட்ட கால எல்லையை 2017-2018 வரை நீடித்துக் கொள்வதற்குமாக சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.