• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-04-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2016 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளுக்கு அமைவாக இலங்கை பொலிஸ் சேவையின் சம்பளங்களை திருத்துவதற்கு மேலதிக நிதி ஏற்பாடுகளைப் பெற்றுக்கொள்ளல்
- 2016 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுக்கு அமைவாக இலங்கை பொலிஸ் சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நீக்கும் நோக்கில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 40 சதவீதம் கொண்ட விசேட படியொன்றை இரண்டு கட்டங்களின் கீழ் செலுத்துவது பொருத்தமானதென இனங் காணப்பட்டுள்ளதோடு, இதற்கமைவாக 2016 ஆம் ஆண்டில் 3,000 மில்லியன் ரூபாவும் 2017 ஆம் ஆண்டு சார்பில் 6,000 மில்லியன் ரூபாவுமாக நிதி ஏற்பாடுகள் குறித்தொதுக்கப்பட்டுள்ளன. உத்தேச 40 சதவீத படியினை வழங்குவதற்கு மேலும் தேவைப்படும் 1,042 மில்லியன் ரூபாவைக் கொண்ட மேலதிக நிதி ஏற்பாட்டினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.