2017-04-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வரட்சி நிலைமைக்கு முகம்கொடுப்பதற்காக உலர் வலயத்தில் விவசாய கிணறுகளை புனரமைத்தல் - உருவாகக் கூடிய வரட்சி நிலைமைகளிலும் கூட உலர் வலயங்களில் விவசாய நடவடிக்கைகளை வெற்றிகரமாக நடாத்திச் செல்லும் பொருட்டு இந்த வலயங்களிலுள்ள விவசாயக் கிணறுகளை உரிய தரத்திற்கு அமைவாக புனரமைக்கும் தேவை எழுந்துள்ளது. இதற்கமைவாக உலர் வலயத்திலுள்ள 14 மாவட்டங்களில் விவசாயக் கிணறுகளை புனரமைக்கும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|