2017-04-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் விவசாயபீடத்தை விரிவுபடுத்து வதற்காக அருகிலுள்ள காணியை சவீகரித்து கொள்ளல் - இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் விவசாயபீடத்திற்கு ஆண்டொன்றில் சுமார் 150 மாணவர்கள் தற்போது உள்வாங்கப்படுகின்றனர். அரசாங்க பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 5% இற்கும் 10% இற்கும் இடைப்பட்ட அளவில் அதிகரிக்கும் அரசாங்கத்தின் கொள்கைக்கு ஒருங்கிணைவாக இந்த விவசாய பீடத்தையும் அபிவிருத்தி செய்ய வேண்டுமென இனங்காணப்பட்டுள்ளதோடு, அதற்குத் தேவையான வசதிகளை ஏற்பாடு செய்வதற்காக ஏற்கனவே சுவீகரிக்கப்பட்டுளள 3.6 ஹெக்டயார் விஸ்தீரணமுடைய காணித் துண்டை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான நிதியத்தை ஏற்பாடு செய்து கொள்ளும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |