• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-04-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தெற்கு அதிவேகப் பாதைக்கான பயணிகள் போக்குவரத்து பேரூந்துகளுக்கு உரிமப் பத்திரங்களை வழங்குதல்
- தெற்கு அதிவேகப் பாதைக்கான பயணிகள் போக்குவரத்து பேரூந்துகளுக்கு உரிமப் பத்திரங்கள் வழங்குவதற்குரியதாக தற்போது நடைமுடையிலுள்ள தகவுதிறன்கள் சம்பந்தமாக உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள கட்டளை மற்றும் சட்டமா அதிபரின் ஆலோசனைகள் என்பனவற்றுக்கு அமைவாக தகவுதிறன்களைத் திருத்துவதற்கும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தின் உரிய பிரிவுகளை திருத்துவதற்கும் காலி வீதியில் வசுவண்டிகளை ஈடுபடுத்தியுள்ள உரிமப்பத்திரதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கி தெற்கு அதிவேகப் பாதைக்கான பயணிகள் போக்குவரத்து உரிமப் பத்திரங்களை வழங்கும் பொருட்டு மீண்டும் கேள்வி கோருவதற்குமாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.