• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-04-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2016/2017 பெரும்போகக் காலப்பகுதியில் வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயக் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குதல்
- 2016/2017 பெரும்போகத்தில் நெல் பயிரிட்டு வறட்சியினால் பயிர்ச்செய்கை சேதமடைந்த விவசாயிகளுக்கும் வறட்சியினால் நெல் செய்கைபண்ணாத விவசாயிகளுக்கும் வறட்சியினால் சேதமடைந்த ஏனைய பயிர்களை செய்கைபண்ணிய விவசாயிகளுக்கும் குடும்பமொன்றுக்கு 10,000/= ரூபா வீதம் விசேட நிதியுதவியொன்றை 2017 ஏப்ரல் மாதம் சார்பில் வழங்குவதற்கும் சிங்கள, இந்து புத்தாண்டிற்கு முன்னர் இந்த நிவாரணத்தை குறித்த சகல விவசாயக் குடும்பங்களுக்கும் வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்குமாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினாலும் கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுப் பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.