• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-04-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்காக இறைவரிச் சலுகை வழங்குதல்
- அதிவரிச் சலுகையை நீக்குவதன் மூலம் வரி அடிப்படையினை விரிவுபடுத்துவதும் அதனூடாக அரசாங்க வருமானத்தை அதிகரிப்பதும் அரசாங்கத்தின் கொள்கையாகும். மூலதன சொத்துக்களின் மீது செய்யப்படும் முதலீடுகள் தொழில்வாய்ப்புகள் மற்றும் முதலீடுகள் செய்யப்படும் பிரதேசம் என்னும் விடயங்கள் மீது மாத்திரம் எதிர்காலத்தில் வரிச்சலுகை வழங்கப்படுவதோடு, இதன் சார்பில் தற்போது வரையப்பட்டுவரும் புதிய இறைவரிச் சட்டத்தில் தேவையான ஏற்பாடுகள் உள்ளடக்கப்படும். இதற்கமைவாக, அட்டவணை ii இன் கீழ் சேர்ப்பதற்குப் பிரேரிக்கப்பட்டுள்ள "முதலீட்டுக்கான சலுகை திட்டம்" மற்றும் அதன் அட்டவணை iv இன் கீழ் சேர்ப்பதற்குப் பிரேரிக்கப்பட்டுள்ள "2017 - 2019 வரையிலான காலப்பகுதிக்குள் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான முதலீட்டாளர்களினால் செய்யப்படும் முதலீடுகள் சார்பில் வழங்கப்படவுள்ள சலுகைத்திட்டம்" என்பவற்றை உள்ளடக்கி உத்தேச உள்நாட்டு இறைவரிச் சட்டமூலத்தை வரைவதற்காக சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.