• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-04-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கேகாலை மாவட்டத்தில் மண்சரிவு அனர்த்தத்திற்கு ஆளான மக்களுக்கு தொடர்ந்தும் சலுகையளித்தல்
- 2016 மே மாதம் பெய்த பெரு மழை காரணமாக கேகாலை மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவின் பின்னர், கடும் ஆபத்துமிக்க நிலைமையிலுள்ள 1,682 வீடுகளில் வசிக்கும் மக்களை மீளக் குடியமர்த்த வேண்டுமென தேசிய கட்டடங்கள் ஆராய்ச்சி அமைப்பினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளதோடு, இந்தக் குடும்பங்களை மீளக் குடியமர்துவதற்கு நிதி வழங்குவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆராயச்சிகளுக்கு அமைவாக குறித்த கடும் ஆபத்துமிக்க வீடுகளின் எண்ணிக்கை 1,941 வரை அதிகரித்துள்ளது. இதற்கமைவாக பின்னர் இனங் காணப்பட்ட 259 குடும்பங்களைப் பாதுகாப்பான இடங்களில் மீளக் குடியமர்துவதற்காக காணிகளையும் வீடுகளையும் வழங்குவதற்கு மேலதிக திறைசேரி நிதி ஏற்பாடுகளை குறித்தொதுக்கிக் கொள்ளும் பொருட்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.