• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-04-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரச சார்பற்ற பட்டம் வழங்கும் நிறுவனங்களில் பட்டப்பாடநெறிகளை கற்பதற்காக மாணவர்களுக்கு வட்டியற்ற கடன் வழங்குதல்
- அரசாங்க பல்கலைக்கழகங்களுக்கு உள்ளவாங்கப்படுவதற்கான வெட்டுப்புள்ளி போதுமானதாக இல்லாத மாணவர்களுக்கு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட அரச சார்பற்ற பட்டம் வழங்கும் நிறுவனங்களில் பட்டப்பாடநெறிகளை கற்கும் பொருட்டு 800,000 ரூபா உச்சக் கடன் எல்லைக்குட்பட்டு, வட்டியற்ற கடன் வசதிகளை வழங்கும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு 2017 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் பிரேரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உயர்கல்வி கற்பதற்கு இளையதலைமுறையினருக்கு கூடிய வாய்ப்புக் கிடைப்பதோடு, தொழிற்சந்தையில் சில பிரிவுகளில் தொழில்வாய்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்கும் இயலுமாகும்.

இதற்கமைய முதலாவது கட்டமாக 2014 ஆம் 2015 ஆம் ஆண்டுகளில் நடாத்தப்பட்ட உயர் தரப் பரீட்சையில் பெற்றுக் கொண்ட வெட்டுப்புள்ளியை அடிப்படையாகக் கொண்டு இதற்காக மாணவர்களை தெரிவு செய்வதற்கும் இதன் பொருட்டு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தேசிய தொழில்முயற்சி முகாமைத்துவ நிறுவனத்தை இணைத்துக்கொண்டு இதன் முதலாம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.