• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-04-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கிராமிய கமத்தொழில் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் சிறு கமத்தொழில் பங்குடமை நிகழ்ச்சித்திட்டம்
- இலங்கையில் கமத்தொழில் உற்பத்தித்துறையின் நிறுவன ரீதியிலான குறைபாடுகளை இனங்கண்டு அதற்கு மாற்றுவழிகளைச் செய்வதற்கும் தொடர் பங்காளர்களுக்கு இடையில் நிலவும் ஒருங்கிணைப்பினைப் பலப்படுத்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்ட "தேசிய கமத்தொழில் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம்" என்பதன் வெற்றியைக் கவனத்திற்கு எடுத்துக்கொண்டு சிறிய கமத்தொழில் உற்பத்தியாளர்களைப் பலப்படுத்துவதற்கான "சிறு கமத்தொழில் பங்குடமை நிகழ்ச்சித்திட்டம்" என்பதனை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி வழங்குவதற்கு கமத்தொழில் அபிவிருத்திக்கான சருவதேச நிதியம் உடன்பாடு தெரிவித்துள்ளது. குறைந்த வருமானம் மற்றும் கமத்தொழில் சார்ந்த மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கி நடைமுறைப்படுத்தப்படும் இந்தக் கருத்திட்டத்தின் கீழ் ஆறு (06) வருடங்களினுள் குறைந்த வருமானம் பெறும் சுமார் 57,500 குடும்பங்களுக்கு நலன்கள் கிடைக்கப்பெறும். சுமார் 105 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட மொத்த முதலீட்டின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இந்தக் கருத்திட்டமானது சனாதிபதி செயலகத்தினால் கையாளப்படும். இதற்கமைவாக, இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்து வதற்கும் இந்த உரிய கடன் நிபந்தனைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு வௌிநாட்டுவளங்கள் திணைக்களத்திற்கு அதிகாரத்தைக் கையளிப்பதற்குமாக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.