2017-04-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
2015 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க குற்றச் செயல்களுக்கு பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு சட்டத்தை திருத்துதல் - இலங்கைக்கு வௌியே ஏதேனும் இடமொன்றில் தூர இருக்கும் ஏதேனும் குற்றச் செயல்களுக்கு பலியாக்கப்பட்டோர் அல்லது சாட்சிகளின் வௌிப்படுத்தலை உரிய நாட்டிலுள்ள இலங்கை தூதரகத்தில் சமகால ஒலி காட்சி இணைப்பு ஊடாக பெற்றுக் கொள்வதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து தயாரிக்கப்பட்டுள்ள 2015 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க குற்றச் செயல்களுக்கு பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரித்ததன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நீதி அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|