• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-04-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நன்னீர் நீர்வாழ் உயிரின வளர்ப்பினை மேம்படுத்துவதற்காக பயிரிடப்படாத வயல்களை பயன்படுத்தும் வேலைத் திட்டம்
- இலங்கையில் மொத்த நன்னீர் மீன் உற்பத்தியில் சுமார் 13 சதவீதம் நீர்வாழ் உயிரின வளர்ப்பு மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. நீர்வாழ் உயிரின வளர்ப்பினை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் நன்னீர் மீன் உற்பத்தியை அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது. ஈர வலயத்திலும் உலர் வலயத்திலும் எவ்வித பயிர்ச் செய்கைக்காகவும் பயன்படுத்தப்படாது கைவிடப்பட்டுள்ள பயிர் செய்யப்படாத வயல்கள் பெரும்பாலானவை நீர்வாழ் உயிரின வளர்ப்புக்கு பொருத்தமானதென கண்டறியப்பட்டுள்ளதோடு, இதன் மூலம் நன்னீர் மீன் உற்பத்தியை சுமார் 10,000 மெற்றிக் தொன்களால் அதிகரிப்பதற்கும் சுமார் 2,500 மில்லியன் ரூபாவைக் கொண்ட மேலதிக வருமானமொன்றை பெற்றுக் கொள்வதற்கும் இயலுமென கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இதற்குத் தேவையான பயிரிடப்படாத வயல்கள் உரிய சாத்தியத்தகவாய்வின் பின்னரும் உரிய நிறுவனங்களின் அங்கீகாரத்திற்கும் உட்பட்டு பெற்றுக் கொண்டு வயல்களில் நீர் வழிந்தோடும் செயற்பாட்டுக்கு தடையின்றியும் நிரந்தர நிருமாணிப்புகள் இன்றியும் நன்னீர் நீர்வாழ் உயிரின வளர்ப்பு நோக்கங்களுக்காக பயன்படுத்தும் பொருட்டு கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.