• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-04-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாணந்துறையில் புதிய தொழிற்பயிற்சி நிலையமொன்றைத் தாபித்தல்
- களுத்துறை மாவட்டத்தில் இளைஞர்கள் சுமார் 9,000 பேர்கள் வரை க.பொ.த.(சா/த) மற்றும் க.பொ.த.(உ/த) பரீட்சைகளின் பின்னர் பாடசாலையிலிருந்து வௌியேறுகின்ற போதிலும் தேசிய தொழிற்பயிற்சி அதிகாரசபைக்குச் சொந்தமாக இந்த மாவட்டத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களின் ஊடாக பயிற்சி 1,785 இளைஞர்களுக்கு மாத்திரம் வழங்கமுடியுமென்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைவாக அரசாங்கத்தின் தொழிற்பயிற்சி நிலையங்கள் சார்பில் உள்வாங்கப்படக்கூடிய களுத்துறை மாவட்ட இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் பாணந்துறை பிரதேசத்தில் புதிய தொழிற்பயிற்சி நிலையமொன்றை 370 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டுச் செலவில் இரண்டு (02) வருட காலப்பகுதிக்குள் நிருமாணிக்கும் பொருட்டு திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.