• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-04-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஶ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் எதிரகால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக காணியொன்றைக் கொள்வனவு செய்தல்
- ஶ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் 07 பீடங்களைக் கொண்டுள்ளதோடு, தற்போது அதன் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 11,557 ஆகும். வருடாந்தம் அதிகரித்து வரும் மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் கட்டடங்கள் மற்றும் காணிகளை கொள்வனவு செய்வதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக ஶ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் அமைந்துள்ள தனியார் தரப்பொன்றுக்குச் சொந்தமான 377.5 பேர்ச்சர்ஸ் விஸ்தீரணமுடைய காணியை இந்த பல்கலைக்கழத்தினால் பிறப்பித்துக் கொண்ட வருமானத்திலிருந்து ஒரு பகுதியையும் அரசாங்க நிதியையும் பயன்படுத்தி 481.31 மில்லியன் ரூபா தொகைக்கு பல்கலைக்கழக அபிவிருத்தி நோக்கங்களுக்காக கொள்வனவு செய்யும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.