2017-04-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
உள்நாட்டு நிதியங்கள் மூலம் உள்நாட்டு ஒப்பந்தக்காரர்கள் ஊடாக இருபது தேசிய நெடுஞ்சாலைகளை புனரமைத்தல் - சுமார் 12,210 கிலோ மீற்றர் நீளம் கொண்ட நாட்டின் தேசிய நெடுஞசாலை முறைமையை பராமரிப்பதற்கும் சரியான முறையில் நடாத்திச் செல்வதற்குமான பொறுப்பு வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. சுமார் 7,900 கிலோ மீற்றர் நெடுஞ்சாலை தற்போது புனரமைக்கப்பட்டுள்ளதோடு, அண்ணளவாக மேலும் 4,300 கிலோ மீற்றர் நெடுஞ்சாலைகள் உரிய முறையில் புனரமைக்கப்பட வேண்டியுள்ளன. இதற்கமைவாக நாடு முழுவதும் உள்ள "A” மற்றும் “B” வகுப்பைச் சேர்ந்த இருபது தேசிய நெடுஞ்சாலைகளுக்குரிய 564.53 கிலோ மீற்றர் வீதிப் பகுதிகளை 58 பில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டு செலவில் எதிர்வரும் மூன்று (03) வருட காலப்பகுதிக்குள் புனரமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. உள்நாட்டு ஒப்பந்தக்காரர்களின் ஆற்றலை விருத்தி செய்து அவர்களை வீதி நிருமாணிப்புத் துறையில் தேர்ச்சி மிக்கவர்களாக்கும் முக்கியத்துவமும் உள்நாட்டு வங்கிகளின் ஊடாக இதற்குத் தேவையான நிதியங்களைப் பெற்றுக் கொள்ளும் சாத்தியமும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இந்த நெடுஞ்சாலைகளை நிருமாணிப்பதற்காக Swiss Challenge கொள்வனவு முறையை பின்பற்றி அக்கறையுள்ள உள்நாட்டு கம்பனி களிடமிருந்து பிரேரிப்புகளை கோரும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|