• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை நடவடிக்கைகளை மேம்படுத்து வதற்காக யப்பான் அரசாங்கத்தின் மானிய உதவி
- திருகோணமலை துறைமுகத்தின் துறைமுக செயற்பாடுகளை மேம்படுத்து வதற்கும் கப்பல் திசைகாட்டல் முறைமையை மேம்படுத்துவதற்கும் தேவையான யப்பான் உற்பத்திகளை பெற்றுக் கொள்வதற்காக 1 பில்லியன் யப்பான் யென்கள் கொண்ட (அண்ணளவாக 1.3 பில்லியன் ரூபா) கருத்திட்டமல்லாத மானிய உதவியை வழங்குவதற்கு யப்பான் அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக இந்த மானிய உதவியைப் பெற்றுக் கொள்வதற்காக யப்பான் அரசாங்கத்துடன் பரிமாற்றல் பத்திரங்களை கைச்சாத்திடும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.